states

img

போபாலில் மாடு மோதி வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதம்

போபாலிலிருந்து குவாலியரின் தாத்ராவுக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், மாடு மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தியது முதல், மாடுகள் மோதுவதும் அதன் முன்பகுதி சேதமடைவதும் தொடர் சம்பவமாக காணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், போபாலிலிருந்து குவாலியரின் தாத்ராவுக்கு வந்தே பாரத் ரயில் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, குறுக்கே வந்த மாட்டின் மீது ரயில் மோதியதில், ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. மாடு அங்கிருந்து நகர்ந்த பின், 15 நிமிடத்தில் ரயிலின் முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் சரி செய்யப்பட்டு ரயில் புறப்பட்டுச் சென்றது.
 

;